வரவேணும் பரனாவியே | Varavenum Paranaaviye | Tamil Christian Song

வரவேணும் பரனாவியே | Varavenum Paranaaviye | Tamil Christian Song

வரவேணும் பரனாவியே
இலங்குஞ் சுடராய் மேவியே

மருளாம் பாவம் மருவிய எனக்கு
வானாக்கினியால் ஞான தீட்சை தர வர

1
பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோயகளும்
வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே
பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன்
எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்

வரவேணும் பரனாவியே
இலங்குஞ் சுடராய் மேவியே

2
என்றன் பவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும்
எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன்
என்றன் செயலால் யாதொன்றும் முடியா
தின்றே வானாக் கினி வரவேணும்

வரவேணும் பரனாவியே
இலங்குஞ் சுடராய் மேவியே

3
குடிகொள் எந்தப்பாவமும் அடியோடே தொலைத்திடும்
தடுத்தாட் கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும்
படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
அடியேன் ஏசுவுக் கனுதினம்பணி செய்ய

வரவேணும் பரனாவியே
இலங்குஞ் சுடராய் மேவியே

வரவேணும் பரனாவியே | Varavenum Paranaaviye | Tamil Christian Song | CSI Christ Church Ambattur, Ambattur, Chennai, Tamil Nadu, India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Don`t copy text!