வரவேணும் பரனாவியே | Varavenum Paranaaviye | Tamil Christian Song
வரவேணும் பரனாவியே
இலங்குஞ் சுடராய் மேவியே
மருளாம் பாவம் மருவிய எனக்கு
வானாக்கினியால் ஞான தீட்சை தர வர
1
பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோயகளும்
வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே
பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன்
எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்
வரவேணும் பரனாவியே
இலங்குஞ் சுடராய் மேவியே
2
என்றன் பவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும்
எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன்
என்றன் செயலால் யாதொன்றும் முடியா
தின்றே வானாக் கினி வரவேணும்
வரவேணும் பரனாவியே
இலங்குஞ் சுடராய் மேவியே
3
குடிகொள் எந்தப்பாவமும் அடியோடே தொலைத்திடும்
தடுத்தாட் கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும்
படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
அடியேன் ஏசுவுக் கனுதினம்பணி செய்ய
வரவேணும் பரனாவியே
இலங்குஞ் சுடராய் மேவியே
வரவேணும் பரனாவியே | Varavenum Paranaaviye | Tamil Christian Song | CSI Christ Church Ambattur, Ambattur, Chennai, Tamil Nadu, India