தந்தானைத் துதிப்போமே | Thanthaanai Thuthippome | Tamil Christian Song

தந்தானைத் துதிப்போமே | Thanthaanai Thuthippome | Tamil Christian Song

தந்தானைத் துதிப்போமே திருச்
சபையாரே கவி பாடிப்பாடி

விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத்

தந்தானைத் துதிப்போமே திருச்
சபையாரே கவி பாடிப்பாடி

1
ஒய்யாரத்துச் சீயோனே நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும்

தந்தானைத் துதிப்போமே திருச்
சபையாரே கவி பாடிப்பாடி

2
கண்ணாரக் களித்தாயே நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே

தந்தானைத் துதிப்போமே திருச்
சபையாரே கவி பாடிப்பாடி

3
சுத்தாங்கத்து நற்சபையே உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம்

தந்தானைத் துதிப்போமே திருச்
சபையாரே கவி பாடிப்பாடி

4
தூரம் திரிந்த சீயோனே உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை

தந்தானைத் துதிப்போமே திருச்
சபையாரே கவி பாடிப்பாடி

5
சிங்காரக் கன்னிமாரே உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து
மங்காத உம் மணவாளன் யேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும்

தந்தானைத் துதிப்போமே திருச்
சபையாரே கவி பாடிப்பாடி

தந்தானைத் துதிப்போமே | Thanthaanai Thuthippome | Tamil Christian Song | CSI St. Mark’s Church, East Tambaram, Selaiyur, Chennai, Tamil Nadu, India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Don`t copy text!