கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே | Karthavin Janame Kaiththaalamudane | Tamil Christian Song
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
1
பாவத்தின் சுமையகற்றி
கொடும் பாதாள வழி விலக்கி
பாவத்தின் சுமையகற்றி
கொடும் பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மை கரம் நீட்டி காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா
பரிவாக நம்மை கரம் நீட்டி காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு
2
நீதியின் பாதையிலே அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்
நீதியின் பாதையிலே அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்
எது வந்த போதும் மாறாத இன்ப
புதுவாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா
எது வந்த போதும் மாறாத இன்ப
புதுவாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு
3
மறுமையின் வாழ்வினிலே
இயேசு மன்னவன் பாதத்திலே
மறுமையின் வாழ்வினிலே
இயேசு மன்னவன் பாதத்திலே
பசி தாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம் அல்லேலூயா
பசி தாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம் அல்லேலூயா
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே | Karthavin Janame Kaiththaalamudane | Tamil Christian Song | Bethel AG Church, Kolathur, Chennai, Tamil Nadu, India