இந்த அருள் காலத்தில் | Intha Arul Kaalathil | Tamil Christian Song
1
இந்த அருள் காலத்தில்
கர்த்தரே உம் பாதத்தில்
பணிவோம் முழந்தாளில்
2
தீர்ப்பு நாள் வருமுன்னே
எங்கள் பாவம் உணர்ந்தே
கண்ணீர் சிந்த ஏவுமே
3
மோட்ச வாசல் இயேசுவே
பூட்டுமுன் எம் பேரிலே
தூய ஆவி ஊற்றுமே
4
உந்தன் ரத்த வேர்வையால்
செய்த மா மன்றாட்டினால்
சாகச் சம்மதித்ததால்
5
சீயோன் நகர்க்காய்க் கண்ணீர்
விட்டதாலும் தேவரீர்
எங்கள் மேல் இரங்குவீர்
6
நாங்கள் உம்மைக் காணவே
அருள் காலம் போமுன்னே
தஞ்சம் ஈயும் இயேசுவே
இந்த அருள் காலத்தில் | Intha Arul Kaalathil | Tamil Christian Song | CSI St. Mark’s Church, East Tambaram, Selaiyur, Chennai, Tamil Nadu, India