அலங்கார வாசலாலே | Alangara Vasalale | Tamil Christian Song
1
அலங்கார வாசலாலே
கோவிலுக்குள் போகிறேன்
தெய்வ வீட்டின் நன்மையாலே
ஆத்துமத்தில் பூரிப்பேன்
இங்கே தெய்வ சமூகம்
மெய் வெளிச்சம் பாக்கியம்
2
கர்த்தரே உம்மண்டை வந்த
என்னண்டைக்கு வாருமேன்
நீர் இறங்கும் போதனந்த
இன்பத்தால் மகிழுவேன்
என்னுட இதயமும்
தெய்வ ஸ்தலமாகவும்
3
பயத்தில் உம்மண்டை சேர
என் ஜெபம் புகழ்ச்சியும்
நல்ல பலியாக ஏற
உமதாவியைக் கொடும்
தேகம் ஆவி யாவையும்
சுத்தமாக்கியருளும்
4
நல்ல நிலத்தில் விழுந்த
விதை பயிராகுமே
நானும் அவ்வாறே மிகுந்த
கனிகளைத் தரவே
வசனத்தைக் காக்க நீர்
ஈவளிக்கக் கடவீர்
5
விசுவாசத்தை விடாமல்
அதில் பலப்படவும்
ஒருக்காலும் தவறாமல்
உம்மை நான் பின்செல்லவும்
மெய்வெளிச்சத்தை நீரே
என்னில் வீசும் கர்த்தரே
6
சொல்லும் கர்த்தரே நான் கேட்பேன்
நீர் இப்பாழ் நிலத்திலே
பெய்யப்பண்ணும் மன்னா சேர்ப்பேன்
நல்தியானத்துடனே
தாரும் ஜீவ பானத்தை
தீரும் பசிதாகத்தை
அலங்கார வாசலாலே | Alangara Vasalale | CSI St. Mark’s Church, East Tambaram, Selaiyur, Chennai, Tamil Nadu, India