engeyakinum

எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும் | Engeyakinum Swami Engeyakinum | Tamil Christian Song

எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்
அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன்

பங்கம் பாடுகள் உள்ள பள்ளத்தாக்கிலும்
பயமில்லாமல் நான் உந்தன் பாதம் பின்செல்வேன்

வேகும் தீயிலும் மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும்
போகும்போதும் நான் அங்கும் ஏகுவேன் பின்னே

பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும்
பதைக்காமல் நான் உந்தன் பக்கம் பின்செல்வேன்

எனக்கு நேசமாய் உள்ள எல்லாவற்றையும்
எடுத்திட்டாலுமே உம்மை எங்கும் பின்செல்வேன்

உந்தன் பாதையில் மோசம் ஒன்றும் நேரிடா
மந்தாரம் மப்பும் உம்மால் மாறிப்போகுமே

தேவையானதை எல்லாம் திருப்தியாய்த் தந்து
சாவு நாள் வரை என்னைத் தாங்கி நேசிப்பீர்

ஜீவித்தாலும் நான் எப்போ செத்தாலும் ஐயா
ஆவலாகவே உம்மை அடியேன் பின்செல்வேன்

எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும் | Engeyakinum Swami Engeyakinum | Tamil Christian Song | CSI Christ Church Ambattur, Ambattur, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!