east

அஞ்சாதிரு என் நெஞ்சமே | Anjathiru En Nenjame | Tamil Christian Song

1
அஞ்சாதிரு என் நெஞ்சமே
உன் கர்த்தர் துன்ப நாளிலே
கண் பார்ப்போம் என்கிறார்
இக்கட்டில் திகையாதிரு
தகுந்த துணை உனக்கு
தப்பாமல் செய்குவார்

2
தாவீதும் யோபும் யோசேப்பும்
அநேக நீதிமான்களும்
உன்னிலும் வெகுவாய்
கஸ்தி அடைந்தும் பக்தியில்
வேரூன்றி ஏற்ற வேளையில்
வாழ்ந்தார்கள் பூர்த்தியாய்

3
கருத்தாய் தெய்வ தயவை
எப்போதும் நம்பும் பிள்ளையை
சகாயர் மறவார்
மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்
இரக்கமான கரத்தால்
அணைத்து பாலிப்பார்

4
என் நெஞ்சமே மகிழ்ந்திரு
பேய் லோகம் துன்பம் உனக்கு
பொல்லாப்புச் செய்யாதே
இம்மானுவேல் உன் கன்மலை
அவர்மேல் வைத்த நம்பிக்கை
அபத்தம் ஆகாதே

அஞ்சாதிரு என் நெஞ்சமே | Anjathiru En Nenjame | CSI St. Mark’s Church, East Tambaram, Selaiyur, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!