ரட்சா பெருமானே பாரும் | Ratcha Perumane Parum | Tamil Christian Song
1
ரட்சா பெருமானே பாரும்
புண்ணிய பாதம் அண்டினோம்
சுத்தமாக்கி சீரைத் தாரும்
தேடி வந்து நிற்கிறோம்
இயேசுநாதா இயேசுநாதா
உந்தன் சொந்தமாயினோம்
2
மேய்ப்பன் போல முந்திச் சென்றும்
பாதுகாத்தும் வருவீர்
ஜீவ தண்ணீரண்டை என்றும்
இளைப்பாறச் செய்குவீர்
இயேசுநாதா இயேசுநாதா
மேய்ச்சல் காட்டி போஷிப்பீர்
3
நீதி பாதை தவறாமல்
நேசமாய் நடத்துவீர்
மோசம் பயமுமில்லாமல்
தங்கச் செய்து தாங்குவீர்
இயேசுநாதா இயேசுநாதா
ஒருபோதும் கைவிடீர்
4
ஜீவ காலபரியந்தம்
மேய்த்தும் காத்தும் வருவீர்
பின்பு மோட்ச பேரானந்தம்
தந்து வாழச் செய்குவீர்
இயேசுநாதா இயேசுநாதா
ஊழி காலம் வாழ்விப்பீர்
ரட்சா பெருமானே பாரும் | Ratcha Perumane Parum | Tamil Christian Song | CSI Christ Church Ambattur, Ambattur, Chennai, Tamil Nadu, India